Sunday, March 21, 2010

அன்புள்ள சாரு

சாரு, நான் உங்களுடைய ரசிகன் .மக்களை நேரிடையாக பாதிப்பது அரசியல் மற்றும் அரசியல் வாதிகள் தான் .
சாமியார்கள் அல்ல என்பது என் கருத்து .ஒரு லட்சம் கொடுத்து சாமியார் களிடம் போனால் அது பெரிய இழப்பு அல்ல என்பது என் கருத்து .என் மனைவிக்கு அல்லது மகனுக்கு தீராத நோய் குணமானால் நான் லட்ச ரூபாய் கொடுக்க நான் கவலை பட மாட்டேன் .அனால் எனக்கு மின்சாரம் ,குடி நீர் வேண்டும் ,குப்பைகளை அல்ல ஆள் வர வேண்டும்,நல்ல ரோடுகள் வேண்டும் இது போன்ற நிறைய வேண்டும் .அதன் பொறுப்பு அரசியல் வாதி களிடம் உள்ளது .மக்களுக்கு ஒரு பெரயோஜனமும் இல்லாத நித்யா விவகாரம் பற்றி பேசி என்ன பயன். நீங்கள் அரசியல் கட்டுரை கள் எழுத வேண்டும் .விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும் .வெகுஜன பத்திரிகையில் எழுதினால் ஆட்டோ வரும் என்று பயந்தால் அட்லீஸ்ட் ப்ளாக் இல் எழுதுங்கள் .இது உங்கள் எழுத்துக்கு என் எதிர் வினை அல்ல .நானும் என் மக்களும் ஏமாறி கொண்டே இருகிறோம் .அது எப்போது நிற்கும்.அதன் ஆதங்கம் மட்டுமே .

No comments:

Post a Comment